இந்து சமய அறநிலையத்துறை ரூ. 39,000 சம்பளத்தில் வேலை

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர் பணியிடம் ஊதியம்
ஓதுவார் 1 ரூ.12,600 - 39,900

கல்வித்தகுதி:

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். சமய, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் 3 ஆண்டுகள் பயின்றமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் மூலம் பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உடையவர்கள், கோயில் நிர்வாகத்திடம் இருந்து விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 06.06.2023 மாலை 5.45 மணிக்குள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்துசேர வேண்டும்.

Tags : இந்துசமயஅறநிலையத்துறை ,   job

திருக்குறள்

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.
பொருள்;
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள்.

ஓஷோ